இந்த வருடம் 340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு!

 

இந்த ஆண்டு 340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க  தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது, 

மேலும் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 12 சதவீதமாக அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டங்களை வகுத்துள்ளது.

அதன்படி, விதிமுறைகளை முறையாக அமுல்படுத்தி, மக்களை வெளிநாடுகளுக்கு வேலைகளுக்காக அனுப்ப வேண்டும் என அதன் தலைவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளைப் பெற்ற சில முகவர் நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *