வடக்கு ஆளுநர்- மாகாண ஏற்றுமதியாளர் சங்கத்தினர் முக்கிய சந்திப்பு..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(24)  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளமையை ஆளுநருக்கு தெரியப்படுத்தியதுடன் அதன் ஊடாக தம்மால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். 

அதேவேளை, முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் அவற்றை விரைந்து தீர்ப்பதற்கான பொறிமுறை தொடர்பாகவும் இதன்போது ஆளுநருடன் கலந்துரையாடினர்.

Leave a Reply