
இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ‘சோனகர்’ ஆவர். சிங்கள மொழியில் “யொன்” அல்லது “யொன்னு” எனவும் பாளியில் “யொன்ன” என்றும் சமஸ்கிருத மொழியில் “யவன” எனவும் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் அர்த்தம் ‘அறபு நாட்டவர்’ என்பதாகும். தற்போது சிங்களத்தில் ‘யோனக’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.