திருகோணமலை புல்மோட்டைக்கு ஆளுநர் விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (26) திருகோணமலை புல்மோட்டை பகுதிக்கு திடீர் விஜயமென்றை மேற்கொண்டார். 

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். அருள்ராஜ் சென்றிருந்தார் சென்றிருந்தார 

முதலில் புல்மோட்டை பொது மருத்துவமனைகுச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழு, மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, இதுவரைக்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற பிரதேச சபைக்குச் சொந்தமான 

புல்மோட்டை பொதுச் சந்தையையும் ஆளுநர் சென்று பார்வையிற்றார்.  

இதனை, உடனடியாக பொதுமக்களுக்கு திறந்து, பயனளிக்கக் கூடியவாறு நடவடிக்கை எடுக்க, ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *