நடனமாட இடமில்லாமல் சாலையில் ஆடும் பல்கலைக்கழக மாணவர்கள்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம், நடனம் மற்றும் நாடகக் கலை பீடம் ஆகியன, இன்றைய தினம் இந்த நூதன போராட்டத்தில் இறங்கியது.

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று பகல் முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

நடனம், நாடகம் பயிற்சி செய்ய சாலையை அரங்கமாக மாணவ, மாணவிகள் மாற்றியிருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு  கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக முன்புறம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் போது மாணவர்கள் பயிற்சிக்காக ஒரு வழிச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தனர்.

இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 1500 மாணவர்கள் கலைகள் பயின்று கொண்டு இருப்பதாகவும் 100 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்ள  இடமிருப்பதாகவும் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் நடனம் மற்றும் நாடக கலை கல்லூரி மாணவத் தலைவர் ‘சுபுன் தாரக தில்ஷான்’ இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ‘இந்த இடப்பற்றாக் குறையால் தங்களின் கல்விக் காலம் நீடிப்பதால் பல வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *