அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்டு சாதனை படைத்த இலங்கை இளைஞன்..!

அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை யோஹான் பீரிஸ் பெற்றுள்ளார்.

4,892 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில் ஏறி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதேவேளை இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

இது நாட்டின் மலையேற்ற மரபில் அவரது இடத்தை உறுதிப்படுத்திய ஒரு மகத்தான சாதனையாகும். 

இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *