கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கிழக்கு ஆளுநரிடம் விசேட கோரிக்கை..!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும், கிழக்கு மாகாணத்தில் வாழும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உதயம் பார்வையற்றோர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்றுமுன்தினம்(29) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண  ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.  

இதன்போது,பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது அவற்றைக் கருத்தில் கொண்டு வளர்ச்சித் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது, அரச நியமனங்கள்  வேலைகளை வழங்கும்போது மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு வாய்ப்புகளை வழங்குவது போன்ற விடயங்களின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.  

எதிர்கால ஆட்சேர்ப்புகளில், மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்கவும், அபிவிருத்தி திட்டங்களில் அவர்களுக்கு வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply