வீதியில் பயணித்த முதியவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹோமாகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வலவ்வ சந்தியில், வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்றையதினம்(02) இரவு இடம்பெற்றது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

