சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழருக்கு கிடைத்த சமூக சேவை விருது

 சுவிட்சர்லாந்து நகராட்சி அலுவலகத்தினால் ஈழத்தமிழருக்கு சமூக சேவை விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக யாழ்பாணம் சுழிபுரம் மேற்கினை சேர்ந்த சிவசுந்தரம் கிருஷ்ணபிள்ளை என்பவர் சுவிசர்லாந்து சமூக விவகாரத் துறையில் குடிமக்களுக்காக ஆற்றிய சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுவிட்சர்லாந்து நகரமுதல்வர், நகராட்சிமன்ற நிர்வாகம் வாழ்த்து செய்தியினையும் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த நகர முதல்வர், 35 ஆண்டுகளாக உங்களை நம்பி பெருமையுடன் இருக்கிறோம். உள்ளூராட்சி மன்றம் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பாகவும் உங்களை மனதார வாழ்த்துகிறோம்.

உங்களைப் போன்ற ஒரு விசுவாசமான பணியாளரை நம்புவதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், நன்றியுடன் இருக்கிறோம்.  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *