
இலங்கையர்களின் ஹஜ் யாத்திரையினை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்ட மூலமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்குவதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்ட மூலத்திற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஒன்பது பேரைக் கொண்ட குழுவொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பீ. அதபத்துவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.

