
ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழு வழிகாட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு, அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான்.

