
வெளிநாடொன்றில் அகதி அந்தஸ்து கோரி தங்கியிருப்பதாக கூறப்படும், மொஹம்மது மிஹ்ளார் மொஹம்மது ஹன்சீர் அல்லது அசாத் மெளலானா இலங்கைக்கு மீள வரப்போவதாகவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து சாட்சியம் அளிக்கப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்வதற்காக அசாத் மெளலானவை அழைத்து வர முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தார்.

