மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து!

 

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது.

மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கய் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் மல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இப்பாரிய விபத்துச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

எனினும் முச்சக்கரவண்டியில் பணயம் செய்த இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply