கிளிநொச்சியில் மூன்று குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச‌ செயலக பிரிவில்‌ மாவடியம்மன் புதுக்காடு கிராமத்தில் நோர்வே தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையில் நமசிவாய மூதாளர் பேணலக பவுண்டேசனால் அமைக்கப்பட்ட மூன்று வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அந்நிறுவன தலைவர் வே.வாமதேவன், செயலாளர் க.ஜெகரூபன், கிராம சேவையாளர் திருமதி.யு.அல்பிரேட்நிலைக்சியும் கலந்துகொண்டனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஓலைக் குடிசைகளில் வசிக்கும் பெண்தலமைத்து மற்றும் மாற்று திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு நமசிவாய மூதாளர் பேணலக பவுண்டேசனால் புதிய வீடுகள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *