மின் துண்டிப்பு நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்க நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மின் தடை காரணமாக ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இதுவரையில் மின்சாரசபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன் மின்தடை காரணமாக ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான  பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  குறுகிய கால நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *