இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ மத்திய வங்கியில் காணப்படும் தொழில்வாய்ப்புக்களை மூன்றாம் தரப்பு சமூக ஊடகங்கள் மூலம் வேலை வெற்றிடங்களை விளம்பரப்படுத்துவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. தமது இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் மாத்திரமே தகவல்களை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது. .
அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு. வலைத்தளங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அதிகாரமளிக்கப்படவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.