ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.