அமெரிக்காவில் ஆப்பிள் $500 மில்லியன் டொலர் முதலீடு

அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் $500 பில்லியன் டொலர் (£396bn) முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

திங்களன்று (24) அறிவிக்கப்பட்ட முதலீடு செயற்கை நுண்ணறிவு (AI) சேவையகங்களுக்கான டெக்சாஸில் ஒரு பெரிய தொழிற்சாலையை உள்ளடக்கியது.

மேலும், அமெரிக்கா முழுவதும் சுமார் 20 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Trump says Apple shifting to US plants, with specifics unclear

அறிவிப்பில் ஆப்பிள், தனது முதலீடு அதன் “மிகப்பெரிய செலவின அர்ப்பணிப்பு” என்றும் அமெரிக்க உற்பத்திக்கான அதன் ஆதரவை விரிவுபடுத்தும் என்றும் கூறியது.

டெக்சாஸின் ஹூஸ்டனில் அமைக்கப்படவுள்ள புதிய 250,000 சதுர அடி தொழிற்சாலை, நிறுவனத்தின் AI அமைப்பான Apple Intelligenceக்கு ஆதரவாக முன்பு அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட சேவையகங்களைத் தயாரிக்க உள்ளது.

இது 2026 இல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஐபோன் தயாரிப்பாளர் கூறினார்.

ஆப்பிள் தனது தரவு மைய திறனை வட கரோலினா, அயோவா, ஓரிகான், அரிசோனா மற்றும் நெவாடாவில் விரிவுபடுத்துகிறது.

மேலும் அமெரிக்க உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிதிக்கு அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது.

2021 ஆம் ஆண்டில் ஆப்பிள் அமெரிக்காவில் 430 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும், ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 20,000 புதிய வேலைகளைச் சேர்ப்பதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply