
அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்களும் அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அரச ஹஜ் குழுவிற்கான தனியான அலுவலகமொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் ஹஜ் முகவர் சங்கங்களின் நிதியுதவியிலேயே அமைக்கப்பட்டது.