கல்குவாரியில் வேலை செய்தவர் மீது பாறை விழுந்ததில் உயிரிழப்பு

கல்குவாரியில் வேலை செய்தவர் மீது பாறை விழுந்ததில்  உயிரிழப்பு 

மீரிகம பொலிஸ் பிரிவின் பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் மீது திடீரென பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது  

இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் தெரியவருகையில் 

விபத்தில் காயமடைந்த இருவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

 தவலம்பிட்டிய மீரிகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்விபத்தில் உயிழிந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. 

சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply