ஆழியவளையில் சட்டவிரோத மணல் அகழ்வு; பொலிஸார் நடவடிக்கை..!

வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருகிறது

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் தொடர்ச்சியாக மண் அகழ்வு அதிகமாக இடம்பெற்று வந்தது.

தமது  கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் ஆழியவளை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மருதங்கேணி பொலிஸாரிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர் 

இன்றையதினம் மாலை 03.00 மணி அளவில் கிராமத்திற்கு வருகைதந்த பொலிஸார் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வு நடைபெறும் இடங்களை பார்வையிட்டனர்.

Leave a Reply