
யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய ஒரு சொல்லாகும். கிழக்கில் அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவுக்கு வந்த கிரேக்கர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது பயன்படுத்தப்பட்டது. பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா என்றும், தமிழ் மற்றும் சமசுகிருதம் மொழியில் யவனர் என்றும் அழைத்தனர். (Majumdar,1960)

