
பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது, தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது இஸ்லாமிய முறையல்ல என்பதுடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுப் பலன்களையும் அடையவும் முடியாதுள்ளது.