நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம், காலி, குருநாகல், காலி, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், காற்றின் தரம் இன்று 26 தொடக்கம் 56க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் காற்றின் தரம் நல்ல அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.