299 ரூபா பெற்றோல் 310 ரூபாவுக்கு ஏன் விற்கப்படுகிறது? சபையில் சாணக்கியன் கேள்வி

299 ரூபாவுக்கு விற்கப்படும் பெற்றோல்  ஆனது 310 ரூபாய்க்கு ஏன் விற்கப்படுகிறது என இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பாக ஒரு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

தற்போது அதானி குடும்பத்தினுடைய வேலை திட்டங்கள் நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு பொறுப்பான நிபுணர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

மன்னாரில் உள்ள மக்கள் குறித்த காற்றாலைகளை வேறு  இடங்களுக்கு மாற்றுமாறு குறிப்பிட்டு இருந்தார்கள். 

பெற்றோல் மூலமாக அல்லது எண்ணெய்  மூலமாக நான்கு யூனிட்களை  உற்பத்தி செய்வது ஒரு லீட்டர் தேவைப்படுகிறது. இதேவேளை சோலார் ஊடாக 4000 யூனிட் களை உற்பத்தி செய்ய முடியும்.

எந்த அடிப்படையில் இது இடைநிறுத்தப்பட்டது என்பது எனக்கு தெரியாதுள்ளது. அதானி குழுமம்  வெளியேறியதால் ஒரு மில்லியன் டாலர் முதலீடு வெளியே சென்றுள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *