சிவனடிபாத மலை வன பகுதியில் சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது.

 சிவனடிபாதமலை தொடர் வனப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் இன்றையதினம் கைத செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது சிவனடி பாத மலை பருவகாலம் என்பதால் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் அமைக்க சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

நல்லதண்ணி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் இந்திரன் வயது 37 , சுப்பிரமணியம் விஜயகுமார் வயது 35 ஆகிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *