போக்குவரத்து பொலிஸாருக்கான வெகுமதி தொகை அதிகரிப்பு!

போக்குவரத்து பணியில் ஈடுபடும் பொலிஸாருக்கான வெகுமதித் தொகையை பெப்ரவரி முதலாம் திகதி முதல் 25% அதிகரித்து சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை காவல்துறை தலைமை ஆய்வாளர் அனுப்பியுள்ளார்.

சாலைப் பாதுகாப்பைப் பராமரிப்பதிலும் விதிமுறைகளைச் செயல்படுத்துவதிலும் போக்குவரத்து அதிகாரிகளின் முயற்சிகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதை இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்து திணைக்கள நிலைய அதிகாரிகள், களப்பணிகள் மற்றும் அலுவலக கடமைகளில் ஈடுபடும் பரிசோதகர் தர அதிகாரிகள், பொலிஸ் சார்ஜன்ட்கள், பொலிஸ் கான்ஸ்டபிள்கள், களப்பணியில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகளுக்கு வெகுமதி தொகை அதிகரிக்கப்படும்.

மேலும், வெகுதி கொடுப்பனவை தாமதமின்றி அதிகரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *