உடல் மோசமான நிலையில் இருக்கும் யானையை பார்வையிட்ட இம்ரான் எம்.பி

 திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்திற்கு செல்லும் வயற்பகுதில் உடல் மோசமான நிலையில் யானை ஒன்று உயிர்க்கு போராடிக்கொண்டிருந்தது

அதனை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு காட்டு உயிரினகளை பாதுகாக்கும் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களும் அப்பகுதி மக்களும் இம்ரான் எம் பியின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக உரிய இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் யானைக்கு மருத்துவ சிகிக்சை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்து  இதற்கான காரணத்தினையும் கண்டறியுமாறும் குறிப்பிட்டார்

 இலங்கைக்கு உலக சுற்றுலா பயணிகள் வருவதற்கு காரணங்களில் ஒன்று இலங்கையில் உள்ள அழகிய யானைகளே.ஆனால் கடந்த சில வருடத்திற்குள் 

அதிகளவான காட்டு யானைகள் அழிந்து வருவதினை காணக்கிடக்கின்றது.

இலங்கையில் அதிகளவில் பேசப்படும் மற்றும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தும் யானை – மனித மோதலை தீர்ப்பதற்கும், யானைகள் அழியும் அபாயத்தில் இருக்கும் இந்நேரத்தில், யானைகளைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கமும் துரிதப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *