வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இன்றையதினம் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கூரிய ஆயுதத்தாலே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டிற்கமைய வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.