
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து மீடியா போரம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு சேவையாக முஸ்லிம் சேவை கடந்த பல வருடங்களாக காணப்பட்டு வருகின்றது.