
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற மௌலவியொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையணிந்தபடி கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலியொன்று கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டதான தகவலும் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மௌலவியுடன் நேரடியாக உரையாடி விடயம் தொடர்பில் தெரிந்துகொண்டோம்.