நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாலினி பொன்சேகா  சில காலமாக  புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *