
இணைய உலகிற்கு குழந்தைகளை தயார்படுத்துகின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்டியது தமது இணைய பயன்பாடு தொடர்பான தர்க்க ரீதியான சுயவிசாரணை ஒன்றை மேற்கொள்வதாகும். குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் தமது பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் தாம் எத்தகைய முன்மாதிரிகளை கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிறுவர்கள் பெற்றோர்களை கேள்வி கேட்க முடியாதவர்களாக இருந்தாலும் பெற்றோரின் இணையதள பாவனையை மிக அவதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.