அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் வேட்பு மனு தாக்கல்..!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது பல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *