'காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்' – வேட்பு மனுக்கள் நிராகரிப்பில் சூழ்ச்சி ,ஜீவன் தொண்டமான் ஆவேசம்

 கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் எனஇ.தொ.காவின் பொதுச்செயலாளரும்இ நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கiயில்

‘ கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன  ​​இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 எனவே இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். 

 மற்றத் தொகுதிகளில் எமது நிலவரம் சிறப்பாக உள்ளது. ‘காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்.’ – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *