
நான் பிறந்தது கொழும்பில். முதல் நிலைக் கல்வியை தங்கல்லை பிரதேசத்தில் கற்று உயர்தர கல்வியை கற்பதற்காக கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பல்கலைக்கழகம் செல்ல முன்பு பாடசாலை காலத்தில் ஒன்பதாம் தரத்திலேயே அதாவது 1989 நடுப்பகுதியில், Social Students Union என்ற அமைப்புடன் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சார்ந்த விடயங்களில் ஈடுபடத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி சார்ந்த எனது கொள்கைகளை நான் மாற்றியதில்லை. பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டை மாத்திரம் நிறைவு செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கினேன்.