தேர்தல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (22) திருகோணமலை தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது வாக்குரிமை, தேர்தல் வன்முறை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கட்சி பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *