யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா நாளைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை 03.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

உரும்பிராய் கற்பக பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் அகில இலங்கை திருவள்ளுவர் மன்ற தலைவர் அ.ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது  

இவ்விழாவில் யாழ் மாவட்ட செயலர் ம. பிரதீபன் பிரதம விருந்தினராகவும், கோப்பாய் பிரதேச செயலர் சிவஶ்ரீ சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் “வள்ளுவர் காட்டிய வாழ்வியல் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கு பெரிதும் ஏற்படையதாக உள்ளன! ஏற்புடையதாக இல்லை! எனும் தலைப்பில் விசேட பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *