சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் விபத்துக்குள்ளான டிப்பர்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனச் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல் ஏற்றி வந்த ரிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *