வேட்புமனு நிராகரிப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு யாழ் மாநகர சபைக்கு தமிழ் மக்கள் கூட்டணியால்  தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணைக்குழுவால்  நிராகரிக்கப்பட்டிருந்தது. 

குறித்த நடவடிக்கைக்கு  எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக முன்னாள் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தெரிவிக்கையில் 

இந்த மணு வெகு விரைவிலே உயர்நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கிலே எதிர் மன்றதாரராக யாழ்ப்பாண மாநகர சபையினுடைய தெரிவத்தாட்சி அலவலகர், அவரோடு இணைந்து தேர்தல் அலுவலக ஆணைக்குழுவைச் சேந்ர்த மூவர், சட்டமா அதிபர் ஆகியோர் காணப்படுகின்றனர். 

நானும் விக்கினேஸ்வரனும் மனு தாரர்களாக தாக்கல் செய்திருக்கின்றோம். 

இலங்கையின் அரசியல் அமைப்பினுடைய  உறுப்புரை 12, 11, 14  ஆகியவற்றை மீறுகின்ற வகையிலே இந்த வேட்புமனு நிராகரிக்கப்ட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 31 உறுப்பு உபபிரிவு 3யையும்  மீறுவதாகவும் உள்ளது. பாரிய அநீதியை ஏற்படுத்தியுள்ளது.எனவும் சுட்டிக்காட்டியுள்ளோம்.என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply