
தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனை எந்த வகையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையாது. ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளின் போது குறித்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.