ஞாயிறன்று ஷவ்வால் தலைப்பிறை மாநாடு

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை 30ஆம் திகதி (ரமழான் – பிறை 29) மஃரிப் தொழு­கையின் பின் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிறைக்­குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்­தாஹி) தலை­மையில் இடம்­பெறும் இம்­மா­நாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் அதன் பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள அதி­கா­ரிகள், இலங்கை வளி­மண்­ட­ல­வியல் சிரேஷ்ட அதி­காரி உள்­ளிட்டோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *