
இலங்கைக்கான புதிய பலஸ்தீனத்தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது நற்சான்றிதழ் பத்திரத்தை கையளித்தார். பலஸ்தீன நாட்டுக்கான தூதுவராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்வாறு ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்ததுடன், அதன் பின்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.