
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக, கொழும்பு, கொம்பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியின் ‘லொபி’ பகுதியில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெறுப்பூட்டும் விடயங்களை பிரசாரம் செய்தமைக்காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.