
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தனது காட்டுமிராண்டித் தனத்தை ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு வருட காலத்துக்கு மேலாக நீடித்த மோதல்கள் கடந்த ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வந்து இருதரப்பு உடன்பாட்டுடன் போர் நிறுத்தமும் அமுலுக்கு வந்தது. எனினும் மார்ச் நடுப்பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய இஸ்ரேல் மீண்டும் காஸா மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. புதிய தாக்குதல்களில் மாத்திரம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.