
பன்முக ஆளுமைமிகு மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் தாஹா முஸம்மில் கடந்த 23 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். கொழும்பை சேர்ந்த இவர், கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில் கல்வி பயின்ற பின் கணக்காளராக பொதுவாழ்வை ஆரம்பித்து, ஊடகத்துறைக்குப் பிரவேசித்தார். ஊடகத்துறைக்கு பிரவேசிக்க முன் லேக் ஹவுஸ் மற்றும் வீரகேசரி நிறுவனத்தில் பல படிகளில் பணிபுரிந்துள்ளார். முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் முன்னாடிகளில் ஒருவராக முஸம்மில் திகழ்ந்தார்.