கொடுப்பனவுகள் குறைப்பு;; தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பாராளுமன்ற ஊழியர்கள்?

புதிய சம்பள திருத்தங்களின் கீழ் அனைத்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் 70 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஊழியர்கள் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தயாராகி வருவதாக  தெரியவருகின்றது.

பாராளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் ஏற்கெனவே பாராளுமன்றத் தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலதிக நேர ஊதியம் மற்றும் சம்பள முரண்பாடுகள் இல்லாததால், முந்தைய பல அரசாங்கங்கள் சிறிது காலமாக பாராளுமன்ற ஊழியர்களுக்கு இந்த சிறப்புக் கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்த பாராளுமன்ற ஊழியர்களும் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *