
கொம்பனித் தெருவிலுள்ள சிட்டி சென்டரில் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மாத்திரம் குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். குறித்த இளைஞர் கடும் போக்குவாதத்திற்கு போவார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.