
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளான். இந்த கைது கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்ள சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியாயமான சந்தேகத்தின் எதிரொலி என சமாளிக்கின்றது.