திடீரென வெடித்த டயர்; பல்டியடித்த லொறி- மயிரிழையில் உயிர் தப்பிய நபர்கள்..!

குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை 2.30மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதில் பிரயாணம் செய்தவர்கள் சிறு காயத்துக்குள்ளாகியுள்ளதோடு, அருகில் உள்ள மின் கம்பமும் சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *